சென்னை: டி.வி. நடிகை சித்ரா தற்கொலைக்கு அவரது கணவர், தாயார் கொடுத்த மனஅழுத்தமே காரணம் என காவல்துறை தெரிவித்துள்ளது. ஹேம்நாத் குடித்துவிட்டு சின்னத்திரை படப்பிடிப்புக்கு சென்று சித்ராவுடன் சண்டையிட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. ஹேம்நாத்தை பிரிந்து வருமாறு தாய் விஜயா தொடர்ந்து கூறியதால் சித்ராவுக்கு மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.